வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருப்பதால் தன்னால் ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிக்கணக்கில் நிற்க முடியாது என்று அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்:
- ஆபரேஷனுக்கு பிறகு முதல்முறையாக யூடியூப் லைவில் வந்த அர்ச்சனா
- வலது தொடையில் 16 தையல்- அர்ச்சனா
அதன் பிறகு அவர் சக்கர நாற்காலியில் வீடு திரும்பியதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அர்ச்சனாவின் குரல் மாறிப் போனதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது,
என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது. சி.எஸ்.எஃப். கசிவை சரி செய்ய என் தொடையில் இருந்து தோல் மற்றும் தசையை டாக்டர்கள் எடுத்து மூக்கு பகுதியில் வைத்தனர்.
16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும்.
என் மகள் ஜாராவும், சகோதரி அனிதாவும் தான் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
அர்ச்சனா கூறியதை கேட்ட ரசிகர்களோ, நீங்கள் விரைவில் குணமாகி வந்து பழையபடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், படங்களிலும் நடிக்கப் போகிறீர்கள் அச்சுமா என தெரிவித்துள்ளனர்.
0 Comments